இன்று தமிழர்கள் முழுமையான மொழி சுதந்திரம், முழுமையான நாட்டு சுதந்திரம் இல்லாமல் வாழ்கின்றார்கள். இதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை.
காரணம் நமது துடிப்பான தலைமைகள் கூட சுகபோகத்திற்கு அடிமை பட்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
இலங்கை இராணுவத்தின் முதன்மையான மூன்று படையணிகள் கடந்த செவ்வாய்க் கிழமை (24) புதுக்குடியிருப்பு நகரத்தை அண் மித்த போது கடுமையான சமர் மூண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல் வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவு களையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது.
தமிழக அரசியலைத் தற்போது உலுக்கிவரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது இலங்கைத் தமிழருக்காக நேரடியாக நடக்கும் ஆர்பாட்டங்களும் அந்த ஆர்பாட்டங்களில் மறைமுகமாக உலவிவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சாரங்களும். இதை மையமாக வைத்து அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல - அதிலும் தி.மு.க தலைவர் நடத்தும் நாடகத்திற்கு இணையான ஒன்றை உலகில் பார்க்கவே முடியாது போல இருக்கிறது.
பத்திரிகை ஆசிரியர் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதாக குற்றம்சாட்டப்படுவது தவறென்று சொல்கிறது எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புகடந்த 20ஆம் திகதி விடுதலைப் புலிப் போராளிகள் நடாத்திய தமது விமானமூலம் நடாத்திய தற்கொலைத் தாக்குதலுக்கு உதயன் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் என். வித்தியாதரன் உதவியதாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள்.
இலங்கையி்ல் விடுதலைப் புலிகளை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசிடம் போரை நிறுத்து என்று நேரடியாக இந்தியா கூற முடியாது என்று கூறி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ள விளக்கம் வினோதமாக உள்ளது.
எம் மக்களே எம்மால் இயன்றதை செய்வோம் அதை உடனேயே செய்வோம்.
எம் தாயகத்தில் தினமும் நிகழும் படுகொலை பற்றி நாம் அனைவரும் தினமும் அறிந்தும் என்ன செய்வது என்று புரியாமல் நம்மில் பலர் மிக கவலையுற்று செய்வதறியாது தவித்து நிற்பதை நாம் அறிவோம். மக்களே விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.
ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் தொடர்ந்து தமிழ் ஊடகங்கள் மீதும், தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருவவதுதான் வரலாறு....?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மகிந்த நிர்வாகத்தின் யுத்த நிகழ்சி நிரலின் பின்னால் இந்தியா இருப்பதொன்றும் இரகசியமானதல்ல என்ற நிலைமை இப்போது வெள்ளிடைமலையாகிவிட்ட ஒன்று.