2009ம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பர்மாவிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான விஜய் நம்பியாரும் உள்ளடக்கப்படவேண்டும் என சிறிலங்காவிற்கான இரண்டு மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.
சிறிலங்காவினது வடக்குப் பகுதியில் பொதுவாழ்வில் ஈடுபடமுனையும் விடுதலைப் புலிகளின் முன்னாள பெண் போராளிகள் திருமணம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
போன்ற விடயங்களில் பெரும் சவால்களை எதிர்கொண்டு நிற்கிறார்கள் எனத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.
உதயன் தனது இருபத்தைந்தாவது நிறைவு விழாவைக் கொண்டாடி பூரிப்புடன் தன் ஊடகப் பயணத்தில் முசெல்லும் நேரிய பணியில் நிமிர்ந்து நிற்கிறது. நெருக்கடிகள் மேல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும் உதயன் தொடர்ந்தும் தேசியத்தின் குரலாக திடசங்கற்பத்துடன் நடைபயின்று வந்தது. இன்னும் நடைபயிலும்.
எல்லை தாண்டும் மீனவர்கள் விவகாரம் இப்போது உச்சக்கட்ட அரசியல் பரிமாணத்தை எட்டத் தொடங்கியுள்ளது.அதுவும் தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரம் அங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் வரப்போகின்ற நிலையில் முக்கியமானதொன்றாக மாற்றமடைந்துள்ளது.
முன்னாள் போராளிகள் என்றதும் முதலில் முன்னர் படித்த நாவலொன்றின் சம்பவங்களே நினைவுக்கு வருவதுண்டு. அது உலகப்புகழ்பெற்ற கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ எழுதிய 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on Cross). அது கென்ய விடுதலைப் போராட்ட அனுபவங்களை சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல்.
இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அரசுக்கெதிராக முன்வைக்கப்பட்டுவரும் போர் மீறல் குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத் தாய்க்க்கு எங்கள் இறுதி வணக்கம்!
பார்வதி அம்மாள்!
இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்!
இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கியது! எதிரிகளை இடியெனத் தாக்கி நடுநடுங்க வைத்தது! தேசத்துரோகிகளைத் தேடி வேட்டையாடியது!
உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது.
அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளைக் கைவிட்டால் அரசியல் தீர்வு ஒன்றுக்கு வரமுடியும் என்ற வகையில் அரச தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செய்திகள் பரிமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் தீர்வு மற்றும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக இரண்டு சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
ஆமியின் பழைய லைன்கள் நிறைய இருந்தது. நான் முட்டினவுடனே ஆமியின் நிறைய ரீமுகள்(அணிகள்) நான் வந்த எல்லா இடங்களையும் தேடியிருக்கிறார்கள். நான் எல்லாத்திற்கும் ஆயத்தமாகவும் அவதானமுமாகத்தான் போனேன். கூடுதலாகப் பாதை வழியாகத்தான் போயிருக்கிறான். பாதையில் நிறைய ‘சூ’ தடங்களும், கண்டோஸ் சாப்பிட்டுவிட்டுப் போட்ட தடயங்களும் கிடந்தது.