கட்டுரைகள்

பக்கம் 41, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...3940414243...506070...இறுதிப்பக்கம் »

08. 11. 2010: யாழ் நூலகத்தில் வன்முறை: சிறிலங்கா தனது தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதா?

யாழ் நூலகம் சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டு 30 வருடங்களின் பின்னர் அந்த நூலகத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்து வாரம் நூற்றுக்கணக்கில் யாழ் நூலகத்திற்குச் சென்ற சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த புத்தகங்களையும் ஆவணங்களையும் நிலத்தில் வீசினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ் நூலகம் மூடப்பட்டுள்ளது.

07. 11. 2010: மக்களின் குரலாக ஒலிக்கும் பொறுப்புணர்வு அரசஅதிபர்களிடம் இல்லாமற் போயுள்ளதா?

மீண்டும் உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இப்போது வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றனவா இல்லையா என்ற கேள்வி தான் இந்தச் சர்ச்சையின் அடிப்படை. கடந்த மாத பிற்பகுதியில் பிரித்தானிய மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தது.

07. 11. 2010: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை நோக்கித் திரும்பியுள்ளது அரசின் போர் முகம்

பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சி தலைமையிலான கூட்டு அரசு பதவியேற்ற பின்னர் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் முதன் முதலாக பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணம் பெரும் தோல்வியில் முடிந்துள்ளது.

06. 11. 2010: அரசியல் பார்வை: தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை நடக்கக் கூடிய காரியமா?

இராஜ விசுவாசத்தையும், தமிழர் நலனையும் ஒரே கோட்டில் பயணிக்க வைக்க முடியாது................? அரசியல் தீர்வை மறுக்கும் விடயத்தில் தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட நிலை இருக்கிறது. அதை மறைக்கவே தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையைக் காரணம் காட்டியிருக்கிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. ஆனால் தமிழ்க் கட்சிகள் மத்தியில் அத்தகைய ஒற்றுமையோ ஒருமித்த கருத்தோ இல்லை.

04. 11. 2010: “தீபாவளி நல்வாழ்த்துக்கள்”….? எமது பாட்டன் முப்பாட்டனது வீழ்சியை நாமே கொண்டாடலாமா….?

இந்த தீபாவளி பண்டிகையின் உண்மையான நோக்கம் தெரியுமா? தமிழ் வீரனான எமது முன்னைய வீரத் தலைமுறையின் சாட்சியாக விளங்கிய நரகா சூரனை வீழ்த்தி அதற்கு ஒரு கதையையும் உருவாக்கி எம்மையே கொண்டாட வைத்துவிட்டார்கள்.

04. 11. 2010: யாழ் நூல்நிலையம் மீதான இரண்டாவது தாக்குதல் எமக்கு கூறும் செய்தி என்ன?

போர் நிறைவுபெற்ற பின்னர் யாழ் வரும் பெருமளவான சிங்கள உல்லாசப்பயணிகளில் பலர் தாம் வெற்றிபெற்ற இனம் என்ற வெறியுடனே வருவதாக யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தான் யாழ் நூல் நிலையம் மீதான இரண்டாவது தாக்குதல் மூலம் அவர்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

04. 11. 2010: ராஜபட்ச பாதையில் இந்திய அரச நீதி

1992-ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடைக்கு கீழ்க்கண்ட முக்கியமான காரணங்களை இந்திய அரசு கூறிவருகிறது.

04. 11. 2010: “உங்கள் பூர்வீகம் எது?”…புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் ‘ஆளும் உரிமை’ யும்

நாம் வாழும் இப்புலம்பெயர் நாடுகளில் இருவர் முதன் முறையாக ஒருபொது இடத்தில் சந்தித்து தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொள்கின்றனர். இதில் ஒருவர் நம்மவர் மற்றவர் பிற இனத்தவர்.

03. 11. 2010: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை!!!

வணக்கம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்த   முதலாவது அமைச்சரவையின் வெற்றிகரமான  உருவாக்கத்திற்கு  அதன் உறுப்பினர்களுள் ஒருவனாகிய ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் என்னுடைய  நல்வாழ்த்துக்களை  மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும்   உங்கள் அனைவருக்கும்  முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

03. 11. 2010: வடக்கு அரசியலில் சிறிலங்கா அரசின் பகடைக்காயாகும் முன்னாள் போராளிகள்

முன்னாள் போராளிகள் நிலை இப்போது பரிதாபம் தான். அவர்கள் எதைச் செய்யப் போனாலும் அது விவகாரமாக்கப்படும். அவர்கள் யாருடைய நிழலில் இயங்குகிறார்கள் என்று சந்தேகிக்கப்படும். இவையெல்லாம் சிறிலங்கா அரசுக்கு தமிழ்ச் சமூகத்துக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு போதுமான காரணங்களாகும்.
பக்கம் 41, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...3940414243...506070...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.