கட்டுரைகள்

பக்கம் 43, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4142434445...506070...இறுதிப்பக்கம் »

26. 10. 2010: இலங்கை இனப்பிரச்சினையின் 13வது திருத்தம் – பகுதி 1

தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டு 22 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட அரசியல் யாப்பிற்கான 13வது திருத்தம் தற்பொழுது மீண்டும் அரசியல் அரங்கிற்கு பலவந்தமாக இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வினை காலங்கடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்தர் 13++ எனப் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தியா தன் பங்கிற்கு அதனை மிகப்பெரிய தீர்வு யோசனையாக உலகமெல்லாம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றது.

25. 10. 2010: மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப் பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

24. 10. 2010: தமிழ்மக்கள் வலுவான பலத்துடன் உள்ள யாழ்ப்பாணத்திலேயே இந்த நிலை என்றால்…..? வன்னியிலும், கிழக்கிலும்….??

மீள்குடியமர்வு என்ற பெயரில் நடக்கிறது இந்த நாடகம். சிங்கள மக்களை வைத்து அரசாங்கம் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது என்பது தெளிவாகியுள்ளது. இந்த நாடகம் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் மட்டும் அமைந்தது அல்ல. யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்து முயற்சிக்கான ஒரு ஒத்திகையாகவே தெரிகிறது.

24. 10. 2010: கந்தலாகும் இந்திய இராசதந்திரம்

இந்திய தற்காப்புக் கற்கைகள் மற்றும் பகுப்பாய்வுக்கான கழகத்தின் முன்னாள் இயக்குநர் கே.சுப்பிரமணியம் இந்திய பாதகாப்பு விவகாரங்கள் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் இவற்றில் அவருடைய முக்கிய ஆதங்கம் வெளிப்படுகிறது.

23. 10. 2010: சிங்களவர் எதிர் சிங்களவர் – இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்?

தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு  எதிராக போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது.

21. 10. 2010: துருப்பிடித்துப் போன பழைய நிகழ்ச்சி நிரலுடன் பயணிக்கப் போகிறோமா??

சிறிலங்கா மீது போர்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒரு புறம் ஒலித்துக் கொண்டிருக்க மறுபுறம் சிறிலங்கா மீதான உலக முதலீட்டாளர்களின் கவனம் கூர்மையடைந்து வருகின்றது. அரசியல் - பொருளாதாரம் - பாதுகாப்பு என வகைப்படுத்தப்பட்ட முறையிலேய நாடுகளுக்கிடையிலான உறவாடல்கள் உள்ள நிலையில் சிறிலங்காவை நோக்கிய வர்த்தக முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

21. 10. 2010: விடுதலைப் புலிகளை அழிப்பதில் வெற்றிகண்ட இலங்கை இராணுவம் அடுத்த வருடம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய மாற்றங்கள்……….?

இலங்கையைப் பொறுத்தவரையில் இராணுவ ரீதியாக ஒக்ரோபர் 10 ம் திகதி இரண்டு விடயங்களில் முக்கியமான நாள். முதலாவது இலங்கை இராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வு. இரண்டாவது இந்தியப்படைகள் விடுதலைப் புலிகளின் மீது போர் தொடுத்த நிகழ்வு. வடக்கு, கிழக்கில் இந்திய அமைதிப்படை புலிகள் மீது தொடுத்த போர் மூன்று வருடங்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.

21. 10. 2010: சீன விரிவாக்க வலைக்குள் சின்னஞ்சிறு தென்னாசிய நாடுகள்: இலங்கைத் தீவு?

சீன - இந்திய வல்லரசுகளின் மத்தியில் முறுக்கேறிவரும் பூகோள - அரசியல் சூழ்நிலையை அதிக அளவில் தனது நலனுக்கேற்ற வகையில் சாதகமாக்கி கொள்ள முனையும் தெற்காசிய நாடுகளிலே இலங்கை முதலிடம் வகிக்கிறது எனலாம்.

20. 10. 2010: திரு. சி. சந்திரமௌலிசன்; ‘சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடு கடந்த அரசின் யாப்பு’ கட்டுரைக்கு பதிலளிக்கும் திறந்த மடல்

அன்புக்குரிய திரு. சி. சந்திரமௌலிசன்; ‘சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடு கடந்த அரசின் யாப்பு’ எனும் உங்கள் கட்டுரைக்கு பதிலளிக்கும் திறந்த மடல் அன்புக்குரிய திரு. சி. சந்திரமௌலிசன்  அவர்களுக்கு,   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனாகிய ஜெயசங்கர் முருகையா (பிரித்தானியா) ஆகிய நான் அன்புடன் எழுதிக் கொள்வது. சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடு கடந்த அரசின் யாப்பு என்னும் தலையங்கத்தில் நீங்கள் ponguthamil.com எனும் தமிழ் இணையதளத்தில்  எழுதியுள்ள விமர்சனக் கட்டுரைக்கு பதிலளிக்கும் முகமாக நான் இந்த திறந்த மடலினை உங்களிற்காக வரைகின்றேன்.  

20. 10. 2010: மகிந்தாவின் ஆசியுடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் வெற்றி: அனலை நிதிஸ் ச. குமாரன்

இலங்கை  என்பது பௌத்த-சிங்கள மக்களைக் கொண்ட நாடாகவே சிங்கள தேசம் இன்றுவரை கூறிவருகின்றது. தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்றும் இவர்கள் சட்டவிரோதமாக சிங்கள-பௌத்த நாட்டை கைப்பற்றி இன்று தனிநாடு கேட்குமளவு மோசமான நிலைவந்துவிட்டதாக கூக்குரல் இடும் சிங்கள இனவாதிகள்...,
பக்கம் 43, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4142434445...506070...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.