குடாநாட்டில் இப்போதெல்லாம் இளவயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய்திகளையும். குப்பைத் தொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங்களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது.
அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம்.
தமிழீழம், மாவீரர்கள், தமிழ்த்தேசியம், துரோகி என்ற சொல்லாயுதங்கள் மூலம் மோதிக் கொண்டு தனது இனத்தையே ஏமாற்றும் தமிழினம்...............?
இன்று தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் தமிழர்களிடம் ஒற்றுமை வேண்டும் என்பதை சகலரும் உணர்ந்துள்ளனர், ஆனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்களால் ஒற்றமைப்பட முடியாதுள்ளது.
கருத்துச் சுதந்திரம் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் சுதந்திரமாக இருக்க முடியாது?
ஈழத் தமிழினத்தின் 21ம் நூற்றாண்டின் தாயக விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச அரசியல் வடிவமாக உருவாகியதே நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சி. இதனை அறிவு சார் புலமை பெற்றோர் அடங்கிய குழு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே புலம் பெயர் தமிழர் சமூகம் வரவேற்றுச் செயற்படுத்தி வருகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உட்பூசல் 2009 மே 19க்குப் பின்னர் புலத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முடக்க நிலைக்குத் தள்ளிவிட்டது.
கடந்த அறுபது வருடங்களாக ஈழத் தமிழ் மக்களை பிரதநிதித்துவப் படுத்திய அரசியல் தலைமைகள் தாங்கள் சரியென்று நம்பிய ஒரு வழியால் பயணித்து வந்திருக்கின்றன.
அந்த காலகட்டத்தின் நமது தலைமுறைகளும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றுடன் இணைந்து நின்றிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் என்ற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவரின் பெயர்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தனர் சென்னையில் உள்ள சிறப்பு 'தடா' வழக்கு நீதிமன்றத்தால்., மேலும் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா'
நாளிதழில், இன்று வெளிவந்த செய்தியில் தெரிவித்துள்ளனர்.
உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை அவசரமாக அரசு நிறைவேற்ற முனைவது ஏன்?
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் விடயத்தில் அரசாங்கம் வேகமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.
போர் முடிவுக்கு வந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறப்பட்டாலும் கூட, அரசாங்கத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர் உச்ச கட்டத்தில் இடம்பெற்ற காலத்தை விட அதிகளவு தொகை பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டு 22 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட அரசியல் யாப்பிற்கான 13வது திருத்தம் தற்பொழுது மீண்டும் அரசியல் அரங்கிற்கு பலவந்தமாக இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வினை காலங்கடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்தர் 13++ எனப் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தியா தன் பங்கிற்கு அதனை மிகப்பெரிய தீர்வு யோசனையாக உலகமெல்லாம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப் பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மீள்குடியமர்வு என்ற பெயரில் நடக்கிறது இந்த நாடகம்.
சிங்கள மக்களை வைத்து அரசாங்கம் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது என்பது தெளிவாகியுள்ளது. இந்த நாடகம் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் மட்டும் அமைந்தது அல்ல. யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்து முயற்சிக்கான ஒரு ஒத்திகையாகவே தெரிகிறது.