முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 2, மொத்தம் 88 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

04. 08. 2011: வீசும் காற்றை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது, எமது வீரச்செல்வங்களின் இலட்சியத்தை நனவாக்கவேண்டும் – இதுவே இன்று எம்முன்னால் விரிந்து கிடக்கும் வரலாற்று கடமை

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இன்றுவரை ஈழத்தமிழர்களின் துயரங்களை உலக அரங்கிற்குக் கொண்டுவந்து அதிர்வை ஏற்படுத்தியவற்றில் பிரதானமாக இரண்டைக் குறிப்பிடலாம். 1. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை. 2. சுவிஸ் SF1 தொலைக்காட்சி சேவை. ஈழத்தில் துயரப்பட்ட மக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டும்,

03. 08. 2011: பூமி அழியப் போகின்றதா? (பாகம்-2) – நிராஜ் டேவிட்

1983ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA அதாவது National Aeronautics and Space Administration என்ற அமைப்பு வின்வெளி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு வின்கலத்தை வான் வெளியில் அனுப்பியிருந்தது. அந்த விண்கலத்தின் பெயர் ((IRAS) - Infrared Astronomical Satellite. விண்வெளியில் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்த இந்த விண்கலம் வித்தியாசமான ஒரு காட்சியை படிம்பிடித்தது.

03. 08. 2011: சுவிஸ் நாட்டின் SF 1 தொலைக்காட்சியில் சிறீலங்காவின் போர்க்குற்றக் காட்சிகள்!

எம் தாயகத்தில் சிறீலங்கா பேரினவாத அரசாங்கம் அரங்கேற்றிய இனப்படுகொலையின் கொலைக்களங்கள் உலகத்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பெரும் அதிர்வலைகளையும், உலகளாவிய ரீதியில் சிறீலங்காவிற்கு இராஐதந்திர அழுத்தங்களையும் கொடுத்துவருகின்றது.

03. 08. 2011: ” இலங்கை மீது பொருளாதார தடை ” – தமிழ்நாடு அரசு தீர்மானம் – சீமானின் நேர்முகம்

பகுதி 1 பகுதி 2

02. 08. 2011: ப.நடேசன் கொலைசெய்யப்பட்ட வீடியோ இதுவாக இருக்கலாம் எனச் சந்தேகம்! (காணொளி இணைப்பு)

இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சுமார் 300 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்களோடு சென்று சரணடைந்தார் ப.நடேசன் அவர்கள். அவரையும் சமாதானச் செயலாளர் புலித்தேவனையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றது. அவர்களது புகைப்படங்களை ஏற்கனவே வெளிவந்திருந்தது .

01. 08. 2011: பேரினவாதத்தின் குரலாகப் பேசும் சுமந்திரன் பதவி விலகட்டும்!

'சிங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுதான் தமிழ் மக்களுக்கான தீர்வு' என்றும் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என்ற பொருளிலும், கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் சில தினங்களுக்கு முன் இலண்டனில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். சுமந்திரனின் இந்த இரண்டு நிலைப்பாடுகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதில்கூற வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று ஜனநாயக முறையில் சுமந்திரன் உடனடியாக பதவி விலகவேண்டும்.

31. 07. 2011: இணைய மறுக்கும் தலைமைகள் ! அழிந்து செல்லும் புலம்பெயர் மக்களின் போராட்டங்கள் ! சிந்திக்குமா தமிழ் தலைமைகள்!

புலம் பெயர் மக்கள் இன்று தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு ஊன்று கோலாக செயல்பட்டு வருகின்றமை சிறீ லங்கா அரசுக்கு பெரும் தலையிடியாகவும் உலகின் கண்களுக்கு எங்கள் போராட்டம் முடியவில்லை என்று உணரவைக்கவும் விளங்குவதை உலக அரங்கில் காண்கிறோம். ஆயுத போராட்டத்தின் பணபலத்தை வாரி வழங்கிய அதே மக்கள் 2009 காலபகுதியில் பெரும் குழப்பமுற்று புலிகளின் சில இரண்டாதர தலைவர்களின் குழப்பமான செயல்பாடுகளால் மௌனம் காத்து வந்தாலும் தமது போராட்ட உணர்வை பல்வேறு வடிவங்களில் தனிபட்டவர்களாக அல்லது சில அமைப்புகளாக செய்து வந்து உள்ளனர்.

31. 07. 2011: புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.;! மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி. சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று

மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக்கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள். அவர்களின் நினைவுகள் புனிதமானவை. பரிசுத்தமானவை. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் உந்துசக்தியாக, தமிழர் மனங்களில் புத்தொளி பாய்ச்சி, புதுவிசை கொடுக்கும் ஆன்மசக்தியாக இருப்பது மாவீரர்களின் நினைவுகளே.

30. 07. 2011: சுமந்திரன் சொன்னவை எல்லாம் உண்மையானவையா? ஊடகங்கள் பொய்யானவையா? – மக்களே உங்கள் முடிவிற்காக…!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் லண்டனில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பிலான கருத்துவெளிப்பாடுகளும், அதன் எதிர்விளைவுகளையும் அவரை அறிக்கைவிடும் அளவிற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. தேசியம் தொடர்பில் புலம்பெயர் மற்றும் தாயக ஊடகங்களும், மக்களும் கொண்டிருக்கின்ற உறுதியான நிலைப்பாட்டின் வெளிப்பாடே அவரை அறிக்கை விடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தியாகும்.

30. 07. 2011: சர்ச்சைக்குரிய தனது உரை தொடர்பில் சுமந்திரன் விளக்கம்! – வெளிப்படுத்துவது ஊடகத்தின் கடமை; முடிவெடுப்பது மக்களின் கடமை – நெருடல் இணையம்

லண்டனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளை ஒழுங்கு செய்த கூட்டத்தில் சுமந்திரன் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இயங்கும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பில் பாரிய எதிர்ப்பலை தமிழ் மக்களால் சுமந்திரன் மீது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையை ஊடக தர்மம் கருதி எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே இங்கு பிரசுரிக்கிறோம்.
பக்கம் 2, மொத்தம் 88 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.