முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 20, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

01. 09. 2010: தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிநாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவரும் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் கலைப்பார்களா?

கடந்த ஆண்டு மே-19ம் திகதியுடன் தமிழ்மக்களது பாதுகாப்பு கவசமாக விளங்கிய ஆயுதங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்ய முடிவெடுத்தமையும் அதன் பின்னர் இன்றுவரை ஓய்வின்றி மக்களை குளப்பும் வகையிலான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது எமது இனத்தின் தூர்பாக்கியமாகும்.

01. 09. 2010: வன்னி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றமையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு!

வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிமக்கள் போரால் பேரவலத்தில் இருந்து இன்னமும் மீளாத நிலையில் அந்த மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை இந் நிலையில் அவர்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றோம்.

31. 08. 2010: மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியுமா? உயர் சட்ட ஆலோசனையில் ஒபாமாவுக்கான தமிழர்கள்!

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது.

31. 08. 2010: தமிழக மடல்: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன? உணர்வாரா டி.ஆர்.பாலு!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

28. 08. 2010: விடுதலைப் புலிகள் விடையத்தில்: உண்மையில் இவர்கள் விசுவாசிகளல்ல, வியாபாரிகள்………?

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்தென்ன? என்பதை அறிய நேற்று மாலை டெல்லியில் நடந்த விசாரணையில் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூட ஆஜராகவில்லை. பாஜக தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

28. 08. 2010: விடுதலைப்புலிகளை வேரறுக்க சதியா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு என்பது இலகுவில் அழிந்து போகக் கூடிய காகிதத்தில் எழுதப்பட்ட அல்லது கணனியில் தட்டச்சு செய்பட்ட கற்பிதமான ஒன்றல்ல. அது 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவிரர்களதும் அதை விட அதிகமான போராளிகளினதும் அப்பழுக்கில்லாத ஈகத்தினாலும் ஈழப்போராட்டத்தின் வலியை வேதனையை பாரத்தை சுமந்த இலட்சக்கணக்கான மக்களின் உண்மையான அர்ப்பணிப்பினாலும் பங்களிப்பினாலும் காலப்  பெருவெளியில் பதியப்பட்ட ஒன்றாகும்.

01. 08. 2010: போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல்

கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

31. 07. 2010: சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்

சிறந்த கலைஞர்கள். கலைத்தாயின் நேரடியான பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்டு பிறப்பெடுப்பவர்கள். இயல்பாகவே சுயதிறமையும் கலைத்தாயின் கருணையும் கிடைக்கப்பெற்று. கலையுடன் சமூகநலன்கொண்டு வாழ்பவர்கள் சிறந்த கலைஞர்கள்.

30. 07. 2010: பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! – 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

16. 07. 2010: நாய்கள் என்று எம்மை அழைக்கின்றார்கள்! முன்னாள் போராளி பரபரப்புக் கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசின் தடுப்பு முகாம்களில் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும் பி.பி.சி செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
பக்கம் 20, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.