முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 3, மொத்தம் 88 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

29. 07. 2011: தேர்தலுக்கு முன் “தமிழ்தேசியம்” என்று வீரவசனம் பேசிய கூட்டமைப்பு தேர்தலுக்கு பின் தடம் மாற முனைகின்றதா..?

கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக்கட்சிகளையும் அதன் துணைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதன் மூலம் தமிழ்த்தேசத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

29. 07. 2011: சனல்4 வெளியிட்ட காணொளியின் மூலம் மகிந்த மீது நடவடிக்கை எடுக்கமுடியும் – தமிழ்மக்கள் முன்வர வேண்டும் – வருவீர்களா??????

சனல் 4தொலை காட்சி நேற்று ஒளிபரப்பிய காட்சி பதிவில் இரு நேரடி சாட்சிகள்கோத்தபாயாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் சரண் அடைந்த புலிகளை சுட்டனர் என தெரிவித்துள்ளனர். அவ்வாறன இருவரையும் வைத்து மகிந்தாவிற்கு வழக்கு போட பிரித்தானிய தமிழர் சட்ட மேதைகள் தயாராகி வருகின்றன

28. 07. 2011: சனல்4, புதிய ஆதாரம்: சரணைடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது ! – சிறிலங்கா இராணுவ அதிகாரி சாட்சியம் (காணொளி இணைப்பு)

2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் - 4 செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு படுகொலை புரிவதற்கான கட்டளையை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் என யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சாட்சியம் வெளியிட்டிருப்பதாக ச்சனல்-4 குறிப்பிட்டிருக்கிறது.

27. 07. 2011: சனல்4வில் இன்று மாலை 7.00 மணிக்கு(பிரித்தானிய நேரம்) இலங்கை கொலைக்களம் சார்ந்த மற்றுமொரு அதிர்ச்சிகரமான காணொளி!!!!!

சனல்4 வில் இலங்கை கொலைக்களம் சார்ந்த அதிர்ச்சிகரமான மற்றுமொரு காணொளி இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு காண்பிக்கப்பட உள்ளதாக நெருடலுக்கு நம்பகத்தரமான தகவல்கள் கிடைத்துள்ளது.

27. 07. 2011: “83 கறுப்பு ஜுலை“ இரத்தக் களரியை நினைவுகூர்ந்து நடைபெறும் இரத்த தானம்!!!

வணக்கம் !!! இத்துடன் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வருடாந்த குருதிக்கொடை நிகழ்வு, பற்றிய சமூக அறிவித்தலை இணைத்துள்ளோம். ஊடக நண்பர்களே, தயவு செய்து உங்கள் ஊடகங்களின் ஊடாக, இந்நிகழ்வு நடைபெற்று முடியும் வரை தயவுகூர்ந்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களுக்கு முழுமையான உங்கள் ஆதரவை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். “இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் ...

27. 07. 2011: நடிகர் விஜய் கையெழுத்துப் போடவில்லையாம்??? – ஏன்? எதற்காக? – ஒரு சின்ன அலசல்

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொல் திருமாவளவன் கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும் இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட மறுத்துவிட்டாராம்????

24. 07. 2011: தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!

ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம். இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.

23. 07. 2011: முன்னாள் தேசியவாதியின் மறுபக்கம்!

பளை பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை போட்டியிலிருந்து ஓதுங்கிக்கொள்ளுமாறும் அவ்விதம் செய்யாவிடில் விபரீத விளைவுகள் ஏற்படும், உயிருக்கு ஆபத்துவரும் என்றும் ஈபிடிபி அமைப்புடன் இணைந்து செயற்படும் ஆயுததாரி கருணாகரன் என்பவர் மிரட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

14. 07. 2011: தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிப்பு!

தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.

13. 07. 2011: 21ம் திகதி லண்டனில் இருந்து 40தமிழர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் நிராகரிக்க பட்ட மற்றுமொரு தொகுதியினர் எதிர் வரும் இருபத்தி ஓராம் திகதி 40பேர்இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ளனர் . இந்த நாடுகடத்தலை உடன் தடுத்து நிறுத்த தமிழர் அமைப்புகள் எவையும் இதுவரை முன் வரவில்லை 
பக்கம் 3, மொத்தம் 88 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.