ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம்.
இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.
பளை பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை போட்டியிலிருந்து ஓதுங்கிக்கொள்ளுமாறும் அவ்விதம் செய்யாவிடில் விபரீத விளைவுகள் ஏற்படும், உயிருக்கு ஆபத்துவரும் என்றும் ஈபிடிபி அமைப்புடன் இணைந்து செயற்படும் ஆயுததாரி கருணாகரன் என்பவர் மிரட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவில் அகதி தஞ்சம் நிராகரிக்க பட்ட மற்றுமொரு தொகுதியினர்
எதிர் வரும் இருபத்தி ஓராம் திகதி 40பேர்இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ளனர் .
இந்த நாடுகடத்தலை உடன் தடுத்து நிறுத்த தமிழர் அமைப்புகள் எவையும் இதுவரை முன் வரவில்லை
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் எதிர்வரும் 15 ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்களையும் மீறி, மனித உரிமை சட்டங்களையும் மீறி, தமிழினத்திற்கெதிரான தொடர்ச்சியான இன அழிப்பினை நடத்தி வருகின்றது. மக்களின் விடுதலை நோக்கிய உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு சரியான பாதையினைக் காட்டுவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதில் சந்தேகமில்லை.
நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்ப்பட்டு கடலில் தத்தளிக்கும் எம் உறவுகளை காப்பாற்றுங்கள்.
இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது.
இக் கருத்துக்கணிப்பில் நான்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிறீலங்காவில் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலை காரணமாக ஜக்கியநாடுகளில் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.