கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010 அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர்.
இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) இணையத்தளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் நடந்த போரின் போது கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது.
இந்திய – தமிழீழ புவிசார் அரசியல் குறித்து கடந்த அங்கத்தில் நோக்கியிருந்தோம்.
புவிசார் அரசியல் குறித்த நமது பார்வை கெடுபிடிக்கால புவிசார் அரசியல் என்ற காலப்பகுதிக்குள்தான் நின்று கொண்டிருக்கிறது.
இன்றைய அங்கத்தில் சிறிலங்காவின் புவிசார் அரசியலை தமிழீழத்துடன் பொருத்திப் பார்ப்போம்.
நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது.
புலம்பெயர் தமிழ் சட்டவல்லுனர்கள், மற்றும் அரசியல்வாதிகள் இதுகுறித்து கவனம் செலுத்துவது நல்லது. இல்லையேல் இலங்கை அரசு இன்டர்போலை தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை நாம் காலம் தாழ்த்தி உணரவேண்டி இருக்கும். எல்லை கடந்து இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறைகளை புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக நின்று முறியடிக்கவேண்டும்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
மே 31 – ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை? மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக.
கனடாவின் இரு பிரதான நகரங்களில் - இன்னும் இருபது வருடங்களில் சிறுபான்மை சமூகத்தவரே பெரும்பான்மையினராக மாறிவிடுவர் என்று அண்மையில் வெளியான புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அதிகளவிலான குடியேற்றங்கள் மற்றும் பிறப்பு வீதம் அதிகரிப்பு ஆகியவை இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் உலகப் பந்தில் ஒரு நாடாக அமைவதனை ஏன் இந்தியா விரும்பவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலைத் தமிழர் தேசம் எப்போது தேடத் தொடங்கியது?
இக் கேள்விகளுடன் கடந்த அங்கத்தை நிறைவு செய்திருந்தோம்.
தமிழீழம் உலகப் பந்தில் ஒரு நாடாக அமைவதனை ஏன் இந்தியா விரும்பவில்லை என்ற கேள்விக்குப் பதில் தேடுவதற்கு இந்தியாவின் புவிசார் அரசியலை இலங்கைத்தீவுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்து முகிழ்த்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த எச்சரிக்கையை, மொத்தத்தில் கவனயீர்ப்பை அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை
முன்னெடுத்துள்ளது.