முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 56, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5455565758...7080...இறுதிப்பக்கம் »

23. 11. 2009: ஒரு நேரடி சாட்சி: போரினால் துரத்தப்பட்ட வன்னி மக்களின் மீள்குடியமர்வு

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றுக்குச் செல்லும் அரிய சந்தர்ப்பம் கடந்த வாரம் எங்களில் சிலருக்குக் கிடைத்தது.   வெளியாட்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்வது மிக மிகக் கடினம். வவுனியாவில் உள்ள "மெனிக் பாம்" (மாணிக்கம் பண்ணை) முகாம்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது.

23. 11. 2009: இன்று மாவீரர் வாரத்தின் 3ம் நாள் – புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்

இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர்  நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள்  எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தேசியத்தலைவரால் கூறப்பட்டது. அந்த வகையில் எங்கள் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

23. 11. 2009: சூரிச்சில் தமிழ் பேசும் தலைவர்கள் மாநாடு; புதுக் கதையாக எழுமா?… பழைய பல்லவி தானா?

சுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று கூடுகிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்தவுடன் மேலே உள்ள பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தன. கலண்டர் திகதியையும் பத்திரிகைத் திகதியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஏப்ரல் முதலாம் திகதியோ என்று பத்திரிகைத் திகதியும் கலண்டர் திகதியும் ஒன்றாகவே இருந்தன. ஓ! அப்படியானால் சரி,நவம்பர் 19.

23. 11. 2009: மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்

எமது தரவேற்றியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக இந்த ஆக்கம் தாமதமாக வெளியாவதற்கு மன்னிக்கவும். நெருடல் நிர்வாகம் இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது.  இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

22. 11. 2009: லண்டன் தேசிய நினவெழுச்சி நாளில் வைகோ உரையாற்றுவார்

வரும் 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22. 11. 2009: தமிழீழ வைப்பகத்தில் பேணிப் பாதுகாத்த தமிழீழ மக்களின் நகைகள் இலங்கை இனவாதிகளால் கொள்ளை

வடக்கு யுத்த நடவடிக்கைகளின் போது 650 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   குறித்த தங்க ஆபரணங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிப் பாதுகாத்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

22. 11. 2009: இலங்கை அரசியலும் பிராந்திய வல்லாதிக்க போட்டிகளும்

தென்னிலங்கையின் அரசியல் நெருக்கடிகள், பூகோள பிராந்திய போட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போர் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போது பொதுத் தேர்தலையும், அரச தலைவருக் கான தேர்தலையும் விரைவாக நடத்திவிட அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

22. 11. 2009: தேர்தல்களும் சந்திப்புகளும் சில எதிர்பார்ப்புகளும்

மடல்கள் வரைவதில் உலக சாதனை புரிந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வழமையாக அவர் வரையும் மடல்களில் கவிதைகளில் சகோதர யுத்தம், டெசோ மாநாடு பற்றியதான விவகாரங்கள் நிரம்பி வழிந்தாலும் இறுதியாக வெளியிட்ட மடலில் புதியதொரு விடயம் இணைக்கப்பட்டிருந்தது.

22. 11. 2009: ஈழத்தமிழர் மீதான சிறிலங்காவின் அடக்குமுறைக்கு நோர்வேயும் துணையாகின்றதா?

ஈரான், பர்மா மற்றும் சீனா போன்ற சிறிலங்காவின் நட்பு நாடுகளின் வரிசையில் நோர்வேயும் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு துணை போவதாக நோர்வேஜிய பேராசிரியர் ஒருவர் எழுதியுள்ளார். சிறிலங்கா தொடர்பான நோர்வேயின் சமகால நிலைப்பாட்டினை முன்வைத்து ஒஸ்லோ பல்கலைக் கழக சமூக மானிடவியல் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதியுள்ள தனது கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

21. 11. 2009: தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் – எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்

1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்  நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பக்கம் 56, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5455565758...7080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.