முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 56, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5455565758...7080...இறுதிப்பக்கம் »

24. 11. 2009: இன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் – என்றாலும் எப்போ ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

24. 11. 2009: (காணொளி) அவுஸ்திரேலியாவும் – தமிழீழமும்: அவுஸ்திரலியா ஊடகத்தின் ஒரு பார்வை

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை "தமிழ் அகதிகளின்" பிரச்சினை பெரிய அளவில் அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் "தமிழர்களின்" பிரச்சினைகளை அவலங்களை பற்றி பேசாமல் தவிர்த்து வந்த முக்கியமான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்.

24. 11. 2009: வீழ்ந்த ஈழம் எழும்! காலம் அதைச் சொல்லும்!

தேசிய வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த மேதைகளுக்கும் அறிஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படும் வழக்கம் - இந்தியா குடியரசாக மலர்ந்த பிறகு 1954-ல் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது.

24. 11. 2009: இழப்புகளின் மீதான இவர்களின் இருப்புகள்: தமிழர்களின் எதிர்காலம் யார் கையில்?

குளிர்காலம் ஆரம்பித்தால் பனி சூழந்த மலைகள் சுவிசின் அழகை மேலும் அழகாக்கும். இப்போது இங்கே பனிகாலம் மக்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூரிச் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விருந்தினர் விடுதி வழமைக்கு மாறான பரப்புடன் காணப்படுகிற்னது.

23. 11. 2009: தமிழீழத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அரசியல் தலை நகரம் காட்சியளிக்கின்றது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத் துக்கு ஏ9 பாதை யூடாக நேற்றுப் பயணம் செய்தபோது கிளிநொச்சி நகரின் வெறுமையைக் கண்டேன். அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

23. 11. 2009: முக்கியமெனக் குறித்த 2 விடயங்களில் காத்திரமான கலந்துரையாடல்தானும் இன்றி முடிவுற்ற சூரிச் கூட்டம்!

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப் பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த இரண்டு முக்கியவிடயங்கள் குறித்து காத்திரமான கலந்துரையாடல் தானும் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

23. 11. 2009: ஒரு நேரடி சாட்சி: போரினால் துரத்தப்பட்ட வன்னி மக்களின் மீள்குடியமர்வு

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றுக்குச் செல்லும் அரிய சந்தர்ப்பம் கடந்த வாரம் எங்களில் சிலருக்குக் கிடைத்தது.   வெளியாட்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்வது மிக மிகக் கடினம். வவுனியாவில் உள்ள "மெனிக் பாம்" (மாணிக்கம் பண்ணை) முகாம்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது.

23. 11. 2009: இன்று மாவீரர் வாரத்தின் 3ம் நாள் – புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள்

இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர்  நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள்  எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தேசியத்தலைவரால் கூறப்பட்டது. அந்த வகையில் எங்கள் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

23. 11. 2009: சூரிச்சில் தமிழ் பேசும் தலைவர்கள் மாநாடு; புதுக் கதையாக எழுமா?… பழைய பல்லவி தானா?

சுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று கூடுகிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்தவுடன் மேலே உள்ள பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தன. கலண்டர் திகதியையும் பத்திரிகைத் திகதியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஏப்ரல் முதலாம் திகதியோ என்று பத்திரிகைத் திகதியும் கலண்டர் திகதியும் ஒன்றாகவே இருந்தன. ஓ! அப்படியானால் சரி,நவம்பர் 19.

23. 11. 2009: மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்

எமது தரவேற்றியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக இந்த ஆக்கம் தாமதமாக வெளியாவதற்கு மன்னிக்கவும். நெருடல் நிர்வாகம் இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது.  இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
பக்கம் 56, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5455565758...7080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.