முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாங்கள் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமை குறித்து கடுமையாக தெரிவித்துவருவதன் காரணம் இன்று தமிழினத்துக்கு சார்பாக சர்வதேசத்தில் உருவாகிவரும் சூழலை நாம் பிரிந்து நிற்பதனால் இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தினாலாகும்.
விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவின் விளைவுகளை எண்ணிப்பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப்போகிறது? என தமிழக முதலவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட தமிழ் மாணவியின் கைது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி, பிரபாகரனிடம் சான்றிதழ் பெற்றதற்காக அந்த மாணவி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாரென்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தங்கப்பதக்கம் பெற்றதற்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியது.
வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக்குழுக்களும் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்வரும் மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்கம் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் தாயகபூமி இலங்கைப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்களின் இறைமை முற்றாக நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த்தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரம் ரூபா புதிய நாணயத் தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பயங்கரவாதியாக ஆக்கியதும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக உருவாவதற்கும் அரச பயங்கரவாதமே காரணம் என ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய வணக்கத்திற்குரிய யோவான் தேவானந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் அரசு ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் நிறுத்தப்படவில்லையானால், அது மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.