இலங்கையின் பழைய நாடாளுமன்றம் இது. ரம்மியமான கடற்காற்று வீசும் காலிமுகத்திடலுக்கு அண்மித்து இருக்கும் பழமைவாய்ந்த கட்டடம்.
இலங்கையின் சிறுபான்மை இனத்தவரை கசக்கிப் பிழிந்த சட்டங்கள் பற்றியும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் பழமைவாய்ந்த நாடாளுமன்றத்தின் ஒவ்வோர் சுவர்களுக்கும் நன்கு தெரியும்.
சஞ்சனாதேவிஎனக்கு முதற் கடிதம் எழுதியது 1996 ஜனவரி மாதத்தில் என்று நினைக் கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து சந்திரிகா குமாரதுங்கே ஏவிய சிங்களப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு வன்னி அக்கராயன் குளம் பகுதியில் அகதி யாகிய நாட்களில் அவர் எழுதிய கடிதம் அது.
‘நாங்கள் இங்கு இறக்கப் போகின்றோம். அதற்கு முன்பாக எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறி அழும் வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் அவலக் குரல்கள் எங்களுக்குக் கேட்கிறதோ, இல்லையோ உலகின் மனச்சாட்சியை உருக வைத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக- அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது.
கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நான் தமிழீழத்திலிருந்து அதன் கலாச்சார நகராம் யாழ்ப்பாணத்திலிருந்து இம்மடலை எழுதுகின்றேன். ஏறக்குறை 38 வருடங்கள் இம்மண்ணிலேயே வாழ்ந்தவன் - வாழந்து கொண்டிருப்பவன் என்ற உரிமையில் புலம் பெயர் மக்களிடமும் எம் தாய்த் தமிழ் ஈழ மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடமும் ஒரு வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம் என் நினைக்கின்றேன்.
புலம்பெயர் தமிழரில் குறிப்பிட்ட அளவானவர்களின் எண்ணப்பாடு புலிகளின் அழிவுக்கு ஒரு காரணம் அவர்கள் பாரதத்தைப் பகைத்துக் கொண்டதாகும். புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் அழிவினோடு தமிழர் போராட்டம் சிதைவுற்றதென்றும் இது புலிகளின் அல்லது மிகச்சரியாக தலைவரின் தூரநோக்கில் நிகழ்ந்துவிட்ட தவறாகும் என்பதும் இவர்களது வாதம் ஆகும்.
இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் யார் மீதும் உள்ள தனிப்பட்ட வெறுப்போ அல்லது யாரையும் புண்படுத்துவதோ அல்ல மாறாக தலை மொட்டைபோல் தெரிகிறதென்பதற்காக மிளகாய் அரைக்க நினைக்கக் கூடாதென்பதற்காகவும் தமிழினம் சந்திக்கும் சந்திக்க இருக்கும் மிகப்பெரும் சவால்களை தொட்டுச் செ(சொ)ல்வதற்குமேயாகும்.
திருமலை வடக்குப் புல்மோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 ஆண்கள் சிறீலங்கா படையினரால் கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழு அக்டோபர் மாதம் 2 ம் நாள் தொடக்கம் 4 ம் நாள் வரை ஒஸ்லோவில் கூடியது. நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தொடர்பான நடைமுறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது.