மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.
தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் கூட்டமைப்பு சில நிபந்தனைகளுடன் பங்கேற்க தயார் என தெரிவித்துள்ளதால் அவர்களின் நிபந்தனை என்ன? அதனை தெரிந்துகொள்ள விரும்புகின்றோம் என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனும் ஒஸ்லோவில் நாளை ஒன்றிணைந்து இலங்கை மீது புதிய தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வமான முக்கிய பேச்சுக்களை நடாத்தவுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குழுவினர் தங்களின் விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிடின் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை 2013ம் ஆண்டு மார்ச் மாதமளவில் ஆரம்பமாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்
மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையை, இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் கூட்டமைப்பினரைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலித் தலைவர்கள் இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி துணை போகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டினார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு திட்டத்துடன் முன்வரவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் பணியாற்றும் சிறிலங்காவின் துறைசார் இராஜதந்திரிகளுக்கும், அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற இராஜதந்திரிகளுக்கும் இடையில் நிலவும் போரை, தாமரா குணநாயகத்தின் கடிதம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.