அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளது
அமெரிக்காவின் உலக அமைதி நடவடிக்கை அமைப்பின் வளங்கள் மதிப்பீட்டு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரால் எதையும் செய்யவும் முடியாது, அவர் எதையும் செய்யவும் மாட்டார், அதுபற்றி ஏதும் கூறப்போவதும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி தெரிவித்துள்ளார்.
மாகாணத்துக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்காமை தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு தடையாக அமைந்துள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்
ஐநாவுக்கான சிறிலங்காவின் பிரதிநிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அமெரிக்காவின் செனட் சபையைப் போன்று மேல்சபை ஒன்றையும் உருவாக்குவதே தனது அதிகாரப்பகிர்வுத் திட்டம் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கு வாக்குறுதி கொடுத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது