தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இந்திய முதலமைச்சர்களுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது
சிறிலங்காவில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நேர்மையான நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
“சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண வலியுறுத்துவதுடன் நின்று விடாமல், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கவும், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.“
சிறிலங்காவின் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் போது கணவன்மாரை இழந்த 90,000 வரையான பெண்கள் வாழ்வதாக மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் குறித்து அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எமது நாட்டின் மனித உரிமைகள் குறித்த அக்கறையில் சில வெளிநாடுகள் பேசவில்லை. மாறாக இலங்கை இன்னும் அவர்களின் காலனித்துவ நாடு என்ற எண்ணத்திலேயே சில நாடுகள் செயற்படுகின்றன என்று கொழும்பு மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழர்கள் பாரிய உதவிகளை வழங்கியுள்ளார்கள் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
தமிழர்கள் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது.
Please click here
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.