அனைத்து தமிழீழ மக்களுக்கும் அவசர அழைப்பு: 22.09.2009 அன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்பு
-
இவ் விடயம் 20. 09. 2009, (சனி),
தமிழீழ நேரம் 16:50க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத் தொடரில் பங்குபெற்ற வருதிம் சிறிலங்கா இனவெறிஅரசின் பிரதிநதிகளுக்கு எதிராகவும், சிறிலங்கா இனவெறிஅரசின தமிழின அழிப்பை கண்டித்தும், வன்னியில் சிறிலங்கா இனவெறி அரசினால் முட்கம்பி வதைமுகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் இனப்படு கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் சித்திரவதைகளையும் தடுத்து நிறுத்தி எமது தாயக உறவுகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.சபையை வலியுறுத்தி நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உணர்வாளர்களைளும் அணிதிரண்டு வருமாறு வேண்டுகின்றோம்.
இடம்: FRONT OF UNITED NATIONS (E 47 STREET&1 AVE)
காலம்: செவ்வாய் 9/22/2009
நேரம்: 10AM– 5 PM