டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் மாவீரர் நாள் நிகழ்வு பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது
-
இவ் விடயம் 28. 11. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 18:59க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 27-11-09 அன்று நண்பகல் 12:00 மணியளவில் மாவீரர்நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து, தங்கள் தேசியப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வு தேசியக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்திலிருந்து அனுப்பப்பட்ட உறுதி அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.
பின்பு துயிலும் இல்லப்பாடல் ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர் கல்லறைகளுக்கும் திருவுருவப் படங்களுக்கும் மாவீரர் குடும்பங்கள், மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள், தமிழ் மக்கள் ஆகிய அனைவரும் தமது வணக்கத்தைச் செலுத்தினார்கள்.
அதன்பின்பு இங்கு மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.






















































