திருகோணமலையில் சிங்கள இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்
-
இவ் விடயம் 30. 11. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 12:05க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
கடந்த வெள்ளிக்கிழலை திருமலை கொட்பே மீனவர் துறைமுகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடிபோதையிலிருந்த மேற்படி சிங்கள இளைஞனை அன்றைய தினம் துறைமுகத்தில் கடமையிலிருந்த கடற்படை வீரரே கடத்திக் கொலைசெய்ததாக மீனவ சமூகத்தினால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை சந்தேக நபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் கருணாரட்ண தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு போலீஸ் படையணி ஒன்று அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இச்சம்பவத்துக்கும் கடற்படையி னருக்கும் எதுவித தொடர்பும் இல்லையென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் தமிழ் இளைஞர் அடித்து விரட்டப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் மீண்டும் ஆயுதப் படையினர் தமது அடுத்த கொலை வெறியை நிறைவேற்றியுள்ளனர்.