இனந்தெரியாத நபர்களால் இந்தோனேசிய தமிழர்களின் படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது
-
இவ் விடயம் 03. 12. 2009, (சனி),
தமிழீழ நேரம் 4:14க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.