பிரான்சில் தனித்தமிழீழத்திற்கான விருப்புக்கோரி உற்சாகமாக நடைபெறும் வாக்குப்பதிவு

இறைமையுள்ள சுதன்திரமான தனித்தமிழீழத்திற்கான விருப்புக்கோரி வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8மணியிலிருந்து நடைபெற்றுவருகின்றது. ஞாயிற்றுக்கிழமையும் காலை 8மணியிலிருந்து பி.பகல் 3மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினால் 30க்கும் மேற்பட்ட சாக்கச் சாவடிகள் பாரீஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உற்சாகமாக வாக்குப்பதிவுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாக்குப்பதிவானது, பாரீஸ்நகரத்தில் உள்ள நகரசபை மண்டபங்களிலும், அயசயி என்ற மண்டபத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பிரதம பார்வையாளர்களாக கலந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய பிரதிநிதிகள் தங்களினுடைய ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டனர்;.

இதே வேளை பிரான்சின் ஏனைய மாநிலங்களில் இன்று சனிக்கிழமையன்றும் உற்சாகமான வாக்கப்பதிவு மேற்கொள்ளப்பட்டதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமையன்றும் பாரிஸ் நகரத்திலும் ஸ்ராஸ்பூர்க், முலூஸ் நகரங்களிலும் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது.

pa 12.12.-3)

pa1212 -2

pa12.12.-5)

pa12.12.-4)

pa12.12.8

pa12.12-7)

pa12.12-1s

toutslesportes

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.