(காணொளி இணைப்பு) காங்கிரசின் தூண்டுதலினால்தான் காவல் துறையினர் என் மீது பொய் வழக்கு தாக்கல் செய்தனர் – வெற்றிகுமரன்
-
இவ் விடயம் 19. 12. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 7:52க்கு பதிவு செய்யப்பட்டது
- காணொளி & ஒலி, தாயக, இலங்கைச் செய்திகள்
நாம் தமிழர் இயக்க மானில ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பாட்டார் இந்த கைது காங்கிரசின் தூண்டுதலினால்தான் இடம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் இயக்க மானில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் அவர்களை மத்திய அரசும் மானில அரசும் இணைந்து கைது செய்து கடந்த 17 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை காவல் துறையினர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் வந்து கையொப்பம் இடும்படி தெரிவித்துள்ளனர்.
இந்த கைது காங்கிரசின் தூண்டுதலினால்தான் காவல் துறையினர் தன் மீது பொய்யான வழக்கு தாக்கல் செய்து தன்னை கைது செய்ததாக வெற்றிகுமரன் தெரிவித்துள்ளார்.