பிரித்தானியத் தமிழீழ மாணவர்களின் துண்டுப் பிரசுர கவனயீர்ப்பு போராட்டம்
-
இவ் விடயம் 22. 12. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 5:57க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
வதை முகாங்களில் அல்லல்ப்படும் தமிழ் மக்களை நிரந்திரமாக விடுவிற்கக்கோரியும், அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான பொருளாதார உதவிகளை உலக நாடுகள் முன்வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டியும், போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றதின் முன் நிறுத்தக் கோரியும்.
பிரித்தானிய தமிழீழ மாணவர்களால் லன்டன் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் கடும் பனி, மழை, குளிரையும் பொருட்படுத்தாது துண்டு பிரசுரங்களை வினியோகிதனர். சில முட்டுக்கட்டைகள் போடப்பட்டன அதனையும் தாண்டி மாணவர்களும், இளையோர்களும் தங்களுடைய பணியை செவ்வனே செய்து வருகின்றார்கள்.
இனியும் தொடர்ந்தும் எவ்வித இடர்கள் வரினும் அயராது தேசதின் விடிவிற்காய் உழைப்போம் என உறுதி கொண்டுள்ளனர்.



