யாழ் கொத்துரொட்டிக் கடையில் நாய் இறைச்சி! வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீக்கிரை!!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

IMG_0119

IMG_0123

IMG_0128

IMG_0133

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.