கடலூர் மாவட்டத்தில் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது
-
இவ் விடயம் 09. 01. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 1:12க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள்
தேசிய தலைவரின் வீரதந்தை திருவேங்கடம் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்,குள்ளன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (08-01-2010) மாலை 6.00 மணிக்கு நடை பெற்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர், மு.அறிவுடைநம்பி, தலைமை தாங்கினர், தொண்டரணி மாவட்டதுணைசெயலாளர் ஜான்சன், நகர செயலாளர் பாஸ்கர், சிறுவர் எழுச்சி மன்றம் மாவட்டதுனை செயலாளர் முற்போக்குமாணவர் கழகம் மாவட்ட துணை செயலாளர் சோ.பிரபு, திருஞான மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, சுமன், கு.சுபாஷ், சே.அருள், எகா.ஆதவன், மு.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு, வீரவணக்க முழக்கம் செலுத்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இன் நிகழ்வில் நுற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


