யேர்மனியில் இருநகரங்களில் வீரத்தந்தையின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனியின் டோட்மூன் ,நூறன்பேர்க்க நகரங்களில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஈகச்சுடரினை தமிழீழ உணர்வாளர் திரு.தீரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர். அதனை அடுத்து நினைவுரையை திரு.தீரன் அவர்கள் நிகழ்தினார்.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.