சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருவதால் நாட்டை விட்டு தப்பியோடும் நடவடிக்கைகளை சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவுக்கான ஆதரவுகள் குறைந்து வருவதால் அவரை ஆதரித்து வரும் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயதிலகாவும் நாட்டை விட்டு தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் சிறீலங்காவுக்கான இரட்டை குடியுரிமைகளை கொண்டுள்ள அவர் தற்போது தனது மகளை அமெரிக்காவுக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த வாரமளவில் அவரின் மகள் அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார்.

அதன் பின்னர் அவர் தப்பியோட உள்ளதாகவும், சிறிலங்காவில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.