இராணுவத்திற்குள் குழப்பம் அதிகரிக்கின்றது, பிரதம அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
-
இவ் விடயம் 31. 01. 2010, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:03க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
சிறிலங்கா இராணுவத்திற்குள் சரத் பொன்சேகா அணி, கோத்தா அணி என இரண்டாக பிளவு படும் நிலைகள் அதிகரிக்கின்றது. இதுவரை 40 பேருக்கு மேற்பட்ட அதிகார நிலையில் உள்ளவர்கள் இரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பல திடீர் இடமாற்றங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
தற்போது இராணுவ தலைமையக பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனெரல் மெண்டக சமரசிங்க நீக்கப்பட்டு மேஜர் ஜெனெரல் டய ரட்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மெண்டக சமரசிங்க சரத் பொன்சேகாவின் விசுவாசி என கூறப்படுகின்றது.

