ஜே.வி.பியை 1989 ஆம் ஆண்டு அழித்தவர் பொன்சேகாவே என்பதை அந்த கட்சி மறந்துவிடக்கூடாது: விமல் வீரவன்சா

ஜே.வி.பியை 1989 களில் அழித்ததில் ஜெனரல் பொன்சேகாவுக்கும் தொடர்புகள் உண்டு என்பதை ஜே.வி.பி மறந்துவிடக்கூடாது என ஜாதிக நிடகாஸ் பெரமுனை கட்சியின் தலைவர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1988 மற்றும் 1989 காலப்பகுதிகளில் பொன்சேகா திருமலை மாவட்ட இராணுவமுகாம் பொறுப்பதிகாரியாக பதவி வகித்திருந்தார். அன்றைய காலத்தில் ஜே.வி.பியினர் மீதான நடவடிக்கையில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

எனவே ஜே.வி.பி இது தொடர்பில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஜே.வி.பியின் குறிப்பிட்ட சில தலைவர்களை கைது செய்த பொன்சேகா அவர்களை கந்தளாய் இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்தார்.

பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறீலங்கா அரசை போர்க் குற்றச்சாட்டுக்களினுள் சிக்கவைக்க ஐ.நாவின் செயலாளர் நாயகம் புதிய ஒரு திட்டத்தை வகுத்துள்ளார்.

இராணுவச்சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்கள் வேறுவிதமாகவே நடத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போதைய அரசு பொன்சேகாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.