தேர்தல் காலத்தில் அரசாங்கம் பக்கச் சார்பற்ற முறையில் செயற்பட வேண்டும் ‐ உச்ச நீதிமன்றம்
-
இவ் விடயம் 11. 03. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 22:08க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பக்கச் சார்பற்ற முறையில் செயற்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் தொடர்பில் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை பக்கச்சார்ப்பற்ற முறையில் ஒலி ஒளிபரப்புச் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு சார்பான முறையில் அரசாங்க ஊடகங்கள் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பக்கச் சார்பான முறையில் தகவல்களை வெளியிடும் அரச ஊடகங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய வேன்டும் என்று பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தெரிவித்துள்ளார்.