பிள்ளையான் நாளை இந்தியா செல்லவுள்ளார்?? சதிவேலை அரங்கேறுமா??

தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்துள்ள எட்டப்பனும், ஆயுததாரியும் கிழக்கு மாகாண டம்மி முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நாளை இந்தியாவுக்கு ரகசிய பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது.

இது தொடர்பான செய்தியை பிள்ளையான் அவர்கள் ரகசியமாகவே வைத்துள்ளார்.பிள்ளையான் அவர்களுடன் கிழக்கு மாகண சபை உறுப்பினர்களும் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ராம் அவர்களை வைத்து இந்திய அரசு ஆடிய நாடகம் வெட்டவெளிச்சமாகியுள்ளதால் ஆயுததாரி பிள்ளையானை வைத்து கிழக்கில் ஏதாவது குழப்பங்களை மேற்கொள்ள இந்தியா முயற்சிக்கலாம் என்று தமிழீழம் நலம் சார்ந்த பல தரப்புக்களாலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.