பரிவாரங்களுடன் ஐ.நா செல்கிறார் மகிந்தா: போர்க்குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தயாராகின்றது தமிழ் சமூகம்
-
இவ் விடயம் 30. 08. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 3:49க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள், விசேட செய்தி
எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.
அவருடன் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் கொண்ட குழுவும் ஐ.நா செல்லவுள்ளது. இந்த விஜயத்தை தொடர்ந்து மெக்சிக்கோ மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் மகிந்த விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் 22 ஆம் நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் மகிந்தாவின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஐ.நா அலுவலகத்திற்கு வெளியில் மேற்கொள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மகிந்தாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என புலம்பெயர் தமிழ் சமூகம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
ஆனால் மகிந்தாவுக்கு எதிராக சிங்களவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.