(காணொளி இணைப்பு) சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்
-
இவ் விடயம் 02. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 3:39க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி & ஒலி, புலத்தமிழர் செய்திகள்
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : “பூவுக்குள்”. இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சுனாமி வந்து கொண்டுசென்ற தாய் தந்தையரை நினைத்து, அவர்களின் இழப்பை தாங்கமுடியாமல் வாடும் ஒரு சிறுமியைக்கூட இலங்கை இராணுவம் விட்டுவைக்காமல் கொலைசெய்யும் காட்சியும், ஈழத்து நிலையும் 1 நிமிடத்தில் மிக நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பரமேஸ்வரனால் நடத்தப்படும் புரட்சிகர மாணவர் அமைப்பின் சார்பாக இக் குறுந்திரைப்படம் வெளியாகி உள்ளது. கடல் தன் தாய் தந்தையரை கொண்றதால் அதனை மன்னிக்கவே முடியாது என்று சொல்லும் சிறுமி, அவரையும் கொன்றுவிட்ட இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து இயங்கலாம் என்று சொல்லித்திரியும் சில தமிழர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். காலத்தின் கட்டாயம் கருதி எடுக்கப்பட்ட இக் குறுந்திரைப்படம் தமிழ் மக்களுக்கு உரிய செய்தி ஒன்றைச் சொல்லி நிற்கிறது.