இலங்கை அகதிகள் ஆஸி வர உதவிய புலம்பெயர் தமிழருக்கு விரைவில் தண்டனை!
-
இவ் விடயம் 03. 09. 2010, (புதன்),
தமிழீழ நேரம் 4:02க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு ஆஸி நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது.
சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன்(வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை இன்று Sydney’s Downing Centre District Court இல் ஒப்புக் கொண்டார்.
இவர் நீதிபதி Robyn Tupman இன் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதிஆஸி வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார்.
இவர் இலங்கை அகதிகளின் உறவினர்களிடம் இருந்து ஆஸியில் வைத்து 4000 அமெரிக்க டொலர் வரை இலஞ்சமாகப் பெற்றிருந்தமையை முதல் தடவையாக நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.