தமிழினப் படுகொலைக்கு இந்தியா எறிகணைகளை வழங்கியுள்ளது
-
இவ் விடயம் 21. 04. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 2:32க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
சிறீலங்காப் படையினர் நடத்தும் தமிழினப் படுகொலைக்கு இந்தியாவினால் பல்லாயிரக்கண்கான எறிகணை வழங்கப்பட்டுள்ளதாக படைத்துறை உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள நிலப்பரப்புக்களை விரைவாக மீட்பதற்காக முதல் தொகுதியில் 50 ஆயிரம் எறிகணைகளை இந்தியா வழங்கியுள்ளது. கடந்த 14ஆம் நாளுக்கு முன்னர் வன்னி நிலப்பரப்பை கைப்பற்றுவதற்காகவே இந்த எறிகணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மற்றொரு எறிகணைகள் தொகுதிகளும் அண்மைய நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.