மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடிக்க பௌத்த நாடுகளுக்கு மகிந்த அழைப்பு
-
இவ் விடயம் 21. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 15:29க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து இலங்கையை காப்பாற்ற உலகில் உள்ள புத்தமத நாடுகள் முன்வர வேண்டும். இந்த நாடுகளை இலங்கைக்கு ஆதரவாக திருப்புவதில் புத்த துறவிகள் முக்கிய பணியாற்ற வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே கலந்துகொண்டு பேசினார்.
பண்டைய காலத்தில் இருந்து புத்த துறவிகள் இலங்கை வரலாற்றில் பல முக்கிய பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்த பணிகளை மேலும் முன்னெடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.