பிரான்சில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பெருமளவு மக்கள்
-
இவ் விடயம் 21. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 20:20க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
பிரான்சில் 20.06.2009 நடைபெற்ற உலக அகதிகள் தினனத்தில் பெருமளவு பிரான்சு வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஈழத்தமிழ் மக்கள் பல தசாப்த காலமாக சிங்கள இன அடக்கு முறையாலும், சிங்கள பௌத்த சித்தாந்தத்தில் ஊறிப்போன சிங்கள ஆட்சியாளர்களின் சுய நலத்தில் சிக்குண்டு இன்று பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து தனது சொந்த நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஏதிலிகளாக ஈழத்தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவும், விடுதலையை பெற்றுக்கொள்ளவும் இன உணர்வோடு தொடர்ச்சியாக தமது வாழ்வுரிமையை கேட்டபடி உலகின் வாசல்களில் அகதிகள் என்ற பெயரையை சுமந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.இன்று உலகின் மிகப்பெரும் அகதி முகாம் என தற்போது வவுனியாவில் அமைந்துள்ள மனிக்பாம் அகதிகள் முகாம் கணிக்கப்படுகின்றது.
இந் நிலையில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள் தமது அன்றாட வாழ்வை வாழ்வதற்கு காத்திரமான நடவடிக்கையை இந்த உலகம் எடுக்கவேண்டும் எனவும், பிரான்சு அரசு தமிழ் மக்களின் விடையத்தில் அக்கறை கொண்டு தொடர்ந்து சுதந்திரமான வாழ்வு ஏற்பட குரல் கொடுக்க வேண்டும் என ஒன்று கூடலில் கூடியிருந்த மக்கள் கேட்டுக்கொண்டனர்.









