வெள்ளைமாளிகைக்கு முன்னால் 45 நாளாக தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்
-
இவ் விடயம் 24. 06. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 23:17க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புலத்தமிழர் செய்திகள்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள் கனடாவில் வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 45 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்ன சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது.



