05-07-2009: அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் “உயிர்த்தெழுவோம்”
-
இவ் விடயம் 29. 06. 2009, (புதன்),
தமிழீழ நேரம் 15:47க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர் செய்திகள்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2009) மாலை 1மணிக்கு மெல்பேர்ண் நகரில் “உயிர்த்தெழுவோம்” நிகழ்வு நடைபெறவுள்ளது.
தாயகத்தில் தடுப்பு முகாம்களிலும்,வதைமுகாம்களிலும் தினம் தோறும் வாடி வதங்கும் எம் உடன் பிறப்புக்களின் உயிர்காக்கவும்,சர்வதேசங்களின் மனக்கதவுகளை தட்டவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சில சர்வதேச சக்திகளின் சதி வலையாலும்,சில ஈனப்பிறவிகளின் துரோகத்தனத்தினாலும் ஏமாற்றப்பட்ட தமிழினம் மீண்டும் விழித்தெழ வேண்டும்.
- சகல அடக்கு முறைகளிலும் இருந்து எம் தமிழினம் விடுதலை பெறவேண்டும்.
- எமது மக்களின் விடுதலையும் அவர்களின் வாழ்தலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
விடுதலை,தாயகம்,சுயாட்சி, உரிமை இவை யாவும் அடையும் வரை தமிழினத்தின் தாகம் அடங்காது.
போராட்டங்களின் வடிவம் மாறலாம், ஆனால் அதன் இலட்சியம் மாறாது அழியாது.
விழித்தெழுவோம்…!!! உயிர்த்தெழுவோம்…!!!
விரைந்து நடப்போம்…!!! உரிமைக்குரல் கொடுப்போம்…!!!
விடுதலை பெறுவோம்…!!! உறவுகளின் உயிர் காப்போம்…!!!
