27-06-2009: டென்மார்க்கில் ஸ்ருவர் நகரில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு
-
இவ் விடயம் 29. 06. 2009, (சனி),
தமிழீழ நேரம் 18:53க்கு பதிவு செய்யப்பட்டது
- புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
27.06.09 சனிக்கிழமை ஸ்ருவர் நகரில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.வணக்க நிகழ்வில் எம் தேசத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும் மக்களுக்காகவும் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மக்களும் மலர்கள் வைத்து தமது வணக்கத்தை செலுத்தினார்கள்.
டெனிஸ் மக்களுக்கு எமது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ருவர் நகரின் நகரசபைக்கு முன்பாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
மாவீரர்களின் வீரகாவியங்களும் கவிதைகளும் இந்நிகழ்வில் வாசிக்கப்பட்டன.





