அமெரிக்க தூதரகம் முன்னாக கனடிய தமிழ் இளையோரால் மேற்கொண்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
-
இவ் விடயம் 06. 07. 2009, (செவ்வாய்),
தமிழீழ நேரம் 15:28க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர் செய்திகள்
அமெரிக்க தூதரகம் முன்னாக கனடிய தமிழ் இளையோரால் மேற்கொண்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ரொரொன்ரோ மத்தியில் அமைந்து இருக்கும் அமெரிக்க தூதரகம் முன்னாக
கனடிய தமிழ் இளையோரால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஆடி மாதம் ஐந்தாம் நாளுடன் நிறைவு பெறுகிறது.
இத்தொடர் போராட்டமானது கடந்த எழுபத்து மூன்று நாட்களாக தொடர்ந்து இருபத்து நான்கு மணித்தியாலங்களும் கனடிய தமிழ் இளையோரால் சிறப்பாக எழுச்சியுடன் மேட்கொள்ளபட்டு வந்ததுடன் கனடிய ஊடகங்களுக்கு எமது செய்திகளை எடுத்துச்சென்றது.
போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்டத்தின் இலட்சியம் என்றும் மாறாது என்ற எமது தேசிய தலைவரின் கூற்றிற்கிணங்க தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு போராட்டத்தை பூர்த்தி செய்து விட்டு புதிய திட்டங்களை உள்வாங்கிய வகையில் இலட்சிய கனவு நிறைவேறும் வரை தமிழின தேசிய விடுதலையை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என கனடிய தமிழ் இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.





