யாழ். வடமராட்சி கற்கோவளம் புனிதநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்களை தேடும் வேட்டையில் சிறிலங்காவின் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
ஓர் இனப் படுகொலை நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. ஒரேநாளில், பல்லாயிரம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் பலியாக்கப்பட, முள்ளிவாய்க்கால் பிண வாய்க்காலாக மாறியது.
அவுஸ்திரேலியாவில் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் கர்ப்பிணி பெண்ணான ரஞ்சனி உட்பட்ட 50 பேரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென தென் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
சமாதானமான ஓர் நாட்டை எதிர்காலத் தலைமுறையினருக்கு வழங்குவதே எனது இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதியால் அளிக்கப்பட்டுள்ள சலுகை பொதுமன்னிப்பு அல்ல என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் பகிஷ்கப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தைச் சூழ பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மத்தியிலும் அப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.