இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம்....
இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும், நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது.
13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அசராங்கம் பறித்து வருவதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சீ.வை. ராம் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வரும் மே 18ம் திகதியை இலங்கை அரசு போர் வெற்றி தினமாக இம்முறையும் கொண்டாடவுள்ளது. இன் நிகழ்ச்சியில் மகிந்த உட்பட பல முக்கிய புள்ளிகள் கலந்து கொள்கிறார்கள். இதனையடுத்து கொழும்பு காலிப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட சூறாவளிப் புயலானது, தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி சற்று நேரத்துக்கு முன்னர், விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.