புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 207 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

20. 05. 2013: நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும் மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம்.

வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது.

20. 05. 2013: தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.

18. 05. 2013: தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது!

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.

18. 05. 2013: மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.

16. 05. 2013: இனப்படுகொலையின் மொத்த சாட்சி ‘முள்ளிவாய்க்கால்.

இதயம்நடுங்கும் இனப்பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவுப்பெருவலி.

14. 05. 2013: மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெறவுள்ளது.

12. 05. 2013: தாய்லாந்து சிறையில் 7 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் கங்காதரன்!

ஈழத்தமிழ் அகதியான திரு.ஆர்.கங்காதரன் அவர்கள் தாய்லாந்திலுள்ள UNHCR எனப்படும் அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்த்தானிகராலயத்தினால் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய வீசா அனுமதியின்றி தங்கியிருந்தார் என்ற காரணத்தினால் தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யபட்டு சுமார் 3 வருடகாலமாக சிறையில் வாழுகின்றார். அவரோடு சேர்த்து அவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் சிறையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.அவர் கடந்த 5ம் திகதிமுதல் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக உண்ணாவிரதமிருந்து வருகின்றார். இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தும் ஆர்.கங்காதரன் அவர்கள் தனது போராட்டம் சம்பந்தமாக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.மனித உரிமை ஆர்வலர்கள், ...

12. 05. 2013: முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த தயாராகும் உலகத் தமிழினம்! உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு!

ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றின் குறியீடாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வருகின்றது.

12. 05. 2013: கனடாவின் மார்க்கம் நகர சபை நிர்வாகத்திற்குள் வரும் முக்கிய வீதிக்கு “வன்னி வீதி” என்ற பெயர் சூட்டப்படுகின்றது.

தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்..

12. 05. 2013: மலேசியாவில் தமிழர் சுட்டுக்கொலை

கேதா மாகாணம், தாமன் சேதியா ஜெயா என்னுமிடத்தில் வசித்து வந்தவர் எம். நாகேந்திரன் (30). கடன் தொகை செலுத்தப்படாத கார்களை, வங்கிகள் சார்பில் பறிமுதல் செய்யும் வேலை செய்து வந்தார்.
பக்கம் 1, மொத்தம் 207 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.