தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 1,335 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

20. 05. 2013: காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினரால் தொடரும் அச்சுறுத்தல்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

20. 05. 2013: தற்போதைக்கு காணி , காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை – டக்ளஸ்

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

20. 05. 2013: கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் – இலங்கை

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

20. 05. 2013: இலங்கையில் இருந்து பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மாற்றத் தேவையில்லை!- மாலைதீவு

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கான தேவைகள் எவையும் இல்லை என்று மாலைதீவு தெரிவித்துள்ளது.

20. 05. 2013: எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது -டி.எம்.ஜயரட்ன

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

20. 05. 2013: தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.

19. 05. 2013: மகிந்த அரசுக்கு எதிராக டக்ளஸ் தலைமையில் 31 அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக, சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

19. 05. 2013: ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைப்பு

ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

19. 05. 2013: ஒரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?- பா.அரியநேந்திரன்

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

19. 05. 2013: சென்னை மெரீனாவில் மே-18 இன அழிப்பு நாள் நினைவேந்தல்!

தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
பக்கம் 1, மொத்தம் 1,335 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.