புகைப்படங்கள்

பக்கம் 19, மொத்தம் 39 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1718192021...30...இறுதிப்பக்கம் »

12. 09. 2010: யேர்மன் பெர்லினில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில்  1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினார்.

12. 09. 2010: உலகில் மிகப்பெரிய சொக்கலேட் (Chocolate)

ஆர்மேனியா நாட்டின் மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான 'கிரான்ட் கன்டி' நிறுவனம், தனது 10ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உலகிலேயே மிகவும் பிரமாண்டமாக சொக்கலேட்டினை தயாரித்திருக்கிறது. 4,410 கிலோகிராம் நிறையுடைய இந்த 'சொக்கலேட் பார்' ஆனாது 25 சென்ரிமீற்றர் தடிப்பம் கொண்டது. இந்த சொக்கலேட் பாரானது 5.6 மீற்றர் நீளமும் 2.75 மீற்றர் அகலமும் கொண்டது.

11. 09. 2010: மானிட நேய நடைப்பயணம்: பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தைக் கடந்தது

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 13வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

10. 09. 2010: லண்டனில் இருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டவரின் நிலை

யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த எடிசன் எமில் ஜெனிபர் லண்டனிலிருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

07. 09. 2010: லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்

பிரித்தானிய தலைநகர் லண்டனில் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று முன்தினம் லண்டன் வெஸ்மினிஸ்டர் சென்றல் ஹோலில் நடைபெற்ற தமிழ்மக்களுடனான பிரித்தானிய தொழில்கட்சியின் சந்திப்பின் போதே டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டு தமிழ்மக்களுடன் கலந்துரையாடினார். 

05. 09. 2010: கிளிநொச்சி பிரதேசத்தில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உதவி

போரினால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைத் தாய்மாருக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர் ச.குகதாசனின் ஏற்பாட்டில் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

04. 09. 2010: இடைத்தங்கல் முகாமில் உள்ள சாந்தபுரம் கிராம மக்களுக்கு நல்லை ஆதீன குருமுதல்வர் மக்கள் கண்ணீர் மல்க ஆசீர்வாதம்

மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சாந்தபுரம் கிராம மக்களை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் ஆசிர்வாதங்களையும் வழங்கியுள்ளார்.

03. 09. 2010: என்னால் நன்றாக படிக்க முடியும், ஆராவது உதவி செய்யுங்கள்! கெஞ்சுகிறது ஒரு பிஞ்சு

நெருடல் வாசகர்களுக்கு, இந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக புலம்பெயர் தமிழீழத்தில் இருந்து ஒருவர் (அவரின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) பொறுப்பெடுத்துள்ளார். இந்த சிறுமியை போலவே இன்னும் எத்தனையோ சிறுவர்கள் சிதறடிக்கப்பட்டுளார்கள், அவர்கள் அனைவரையும் நெருடல் விரைவில் புலம்பெயர் தமிழீழத்திற்க்கு எடுத்து வரும். இந்த சிறுமிக்கு வழங்கிய ஆதரவை போலவே உங்கள் அனைவரின் ஆதரவும் எம் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி நெருடல் குழுமம் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து இருப்பவர் அனுசீலன் குணாலிசா.

02. 09. 2010: சிங்கள பூமியாக மாறி வரும் மாதகல் பிரதேசம்!

யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள சம்பில் துறைக்கு பெருமளவான தென்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள்.

01. 09. 2010: என்னை படிக்க வையுங்கள், அண்ணாமாரை கண்டுபிடியுங்கள்! வன்னிப் போரில் காலை இழந்த சிறுமி உருக்கம்

நெருடல் வாசகர்களுக்கு, இந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக புலம்பெயர் தமிழீழத்தில் இருந்து ஒருவர் (அவரின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) பொறுப்பெடுத்துள்ளார்.   இந்த சிறுமியை போலவே இன்னும் எத்தனையோ சிறுவர்கள் சிதறடிக்கப்பட்டுளார்கள், அவர்கள் அனைவரையும் நெருடல் விரைவில் புலம்பெயர் தமிழீழத்திற்க்கு எடுத்து வரும்.   இந்த சிறுமிக்கு வழங்கிய ஆதரவை போலவே உங்கள் அனைவரின் ஆதரவும் எம் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகின்றோம்.   நன்றி நெருடல் குழுமம் "என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. வயது 14.
பக்கம் 19, மொத்தம் 39 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1718192021...30...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.