புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 176 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

16. 05. 2012: மே-18 முதல் தமிழீழத் நோக்கிய சிற்றலை வானலை ஒலிபரப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது !

தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

15. 05. 2012: யேர்மனியில் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு யேர்மனியில் பொக்கும் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வு  தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. 

14. 05. 2012: கனேடிய தமிழர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்? சன் நியூஸ் நெட்வேக்

கிளிநொச்சியில் வைத்து கனேடிய தமிழ் பொதுமகன் கொல்லப்பட்டமைக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கனடாவின் சன் நியூஸ் நெட்வேக் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.  

14. 05. 2012: தொடரும் அவலங்கள்

இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்

11. 05. 2012: ஜேர்மன்-பேர்லின் Platz des 18.März வரலாற்றுச் சதுக்கத்தில் மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில் ஜேர்மனின்  பேர்லின் Platz des 18.März  வரலாற்றுச் சதுக்கத்தில் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

08. 05. 2012: முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் தமிழினத்தின் அடையாளம் பேண உறுதி பூணுவோம்: நா.க.தமிழீழ அரசாங்கம்

சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வருகின்றது.

07. 05. 2012: லண்டனில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு வெளிப்பாடு! “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு”

பிரித்தானியாவில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு” நிகழ்வு எதிர்வரும் மே 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது.

07. 05. 2012: முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுப்பெருவலி: பல அமைப்புகள் சேர்ந்து பிரான்சில் கூட்டுவெளிப்பாடு

நெஞ்சுவலிக்கின்ற பேரவலத்தை சுமந்து நின்கின்ற தமிழினம், தன்மீது பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட பெருங்கொடுமையை, இந்த உலகத்திற்கு எடுத்துரைத்து, நீதிகேட்கவும் எம்மினத்தின் நிம்மதியான சுதந்திர வாழ்வை மீட்கும் குறியோடு முன்னோக்கி கைகோர்த்து நடக்குமாறு உணர்த்தவும் இக்காலம் எம்முன் விரிகின்றது.

05. 05. 2012: தொடரும் அவலங்கள்

இலங்கையில் பல இழப்புக்களையும் பேரழிவுகளையும் சந்தித்த ஈழத்தமிழர்கள் எஞ்சியுள்ள உயிரை மட்டும் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர்

05. 05. 2012: மே மாதம் 18ம் திகதி அவுஸ்திரேலியாவில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள்

தாயகத்தில் நிகழ்ந்தேறிய கொடிய பேரழிவின் சோகமான நாட்கள் கடந்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சுதந்திரமான வாழ்வுக்கு வாதாடிய எங்கள் உறவுகளின் வாழ்வு குதறப்பட்டு, நீதிக்காக போராடிய ஒரு தேசத்தின் குரல் நசுக்கப்பட்டு, நாட்கள் பல கடந்துவிட்டன.
பக்கம் 1, மொத்தம் 176 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.